பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களில் உண்மை தன்மை இல்லை என கூறியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, பதஞ்சலி நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கியுள்ளன.
பதஞ்சலி நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. முந்தைய நாளில் 1620 ரூபாயாக இருந்த பங்கு மதிப்பு, தற்போது 1535 ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 105 நிமிடங்களில் 2300 கோடி ரூபாய் அளவுக்கு பதஞ்சலி நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. விளம்பரங்கள் மூலம் பொய் பிரச்சாரம் மற்றும் போலியான செய்திகளை பதஞ்சலி நிறுவனம் ஏற்படுத்தியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்ததே
இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.