சீனா - இந்தியா எல்லையின் கிழக்கு பகுதிக்கு மோடியின் வருகையை சீனா கடுமையாக கண்டிக்கிறது.
பிரதமர் மோடி கடந்த ஒன்பதாம் தேதி அருணாச்சலப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதை திட்டமும் அடங்கும். இந்நிலையில், பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்குவேன் பின் கூறியதாவது, சாங்னான் பகுதி சீன பகுதியாகும். அதை இந்தியா அருணாச்சல பிரதேசம் என்று அழைப்பதை சீனா அங்கீகரிக்கவில்லை. இதை உறுதியாக எதிர்க்கிறது. அப்பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்திய அரசுக்கு உரிமை இல்லை. இந்தியாவின் இது போன்ற நடவடிக்கைகள் எல்லை பிரச்சினையை சிக்கலாக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும். சீனா - இந்தியா எல்லையின் கிழக்கு பகுதிக்கு மோடியின் வருகையை சீனா கடுமையாக கண்டிக்கிறது. அதை உறுதியாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.