சிஏஏ -ன் கீழ் மக்கள் விண்ணப்பிக்க CAA-2019 என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.o
நாடு முழுவதும் கடந்த 11ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவானது கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் நான்கு ஆண்டுகள் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சிஏஏ வகை செய்கிறது. இந்த குடியுரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இதற்கு முன்னதாக இணையதளம் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து CAA-2019 என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.