மனிதர்களின் மூளை பெரிதாகி வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
JAMA Neurology என்ற இதழில், அண்மையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மனிதர்களின் மூளை அளவு பெரிதாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய தலைமுறை மனிதர்களுக்கு ஞாபக மறதி அபாயங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவினர் நடத்திய இந்த ஆய்வில், 55 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்றனர். அதாவது 1970களில் பிறந்தவர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். அவர்களது மூளை அளவு 1930 களில் பிறந்தவர்களை விட 6.6% பெரிதாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மூளையில் உள்ள வைட் மேட்டர் 8% அளவிலும், கிரே மேட்டர் 15% அளவிலும் பெரிதாக உள்ளதாக கண்டறிந்துள்ளனர். அதன்படி, வருங்கால தலைமுறையினரின் ஞாபகம் மறதி குறைபாடுகள் குறையலாம் என கருதப்படுகிறது.