இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணங்கள் தேர்தலுக்குப் பின்னர் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வழியாக உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் இறுதிக்கட்டமாக ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நான்காம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனம் அதிக பயன்பெறும் எனவும், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2021 டிசம்பரில் ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சுமார் 20 சதவீத கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.