பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்திய பாகிஸ்தான்

April 16, 2024

பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலைகள் வரும் ஏப்ரல் 30 வரை உயர்த்தப்படுகின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.53 பாகிஸ்தான் ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 8.14 பாகிஸ்தான் ரூபாயும் உயர்த்தப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 293.94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு லிட்டர் டீசல் 290.38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, அடுத்த 15 நாட்களுக்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது. அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்காற்று […]

பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலைகள் வரும் ஏப்ரல் 30 வரை உயர்த்தப்படுகின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.53 பாகிஸ்தான் ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 8.14 பாகிஸ்தான் ரூபாயும் உயர்த்தப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 293.94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு லிட்டர் டீசல் 290.38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, அடுத்த 15 நாட்களுக்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது. அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்காற்று அமைப்பின் ஆலோசனைப்படி, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த விலை உயர்வு கொண்டு வரப்படுவதாக பாகிஸ்தான் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu