சீனாவில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் உலகக்கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனைகள் மணிகாபத்ரா மற்றும் ஸ்ரீஜா தோல்வி அடைந்துள்ளனர்.
சீனாவில் உள்ள மக்கா நகரில் ஐடிடிஎப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவின் மணிகா பத்ரா மற்றும் சீனாவின் மான்யூ மோதினர். இதில் மணிகாபத்ரா 6- 11, 4- 11, 9- 11, 4- 11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகோலா சீனாவின் ஷென் மெங்குடன் மோதினார். இதில் 4- 11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் ஸ்ரீஜா தோல்வி அடைந்தார். மணிகா மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவருமே தங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளனர்.