விவிபாட் வழக்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

April 26, 2024

விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் வாக்கு பதிவு செய்வதற்கு மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் சந்தேகப்பட்டு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை […]

விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் வாக்கு பதிவு செய்வதற்கு மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் சந்தேகப்பட்டு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளால் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கானது கடந்த புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அதனை அடுத்து தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. அதற்கான தனி தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் கட்சி கிடையாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவிபாத் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu