கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி

April 30, 2024

கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்ததில் 45 பேர் பலியாகினர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கிரேட் ரீப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு மாய் மாஹியூ பகுதியில் கிஜாபே என்ற அணை உள்ளது. அது திங்களன்று கனமழை காரணமாக உடைந்தது. இதனால் அணையில் இருந்து வெள்ளம் பாய்ந்து மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன. இந்த அணை உடைப்பில் 45 பேர் பலியாகினார். சுமார் 109 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த அணை உடைப்பிற்கு பிறகு […]

கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்ததில் 45 பேர் பலியாகினர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கிரேட் ரீப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு மாய் மாஹியூ பகுதியில் கிஜாபே என்ற அணை உள்ளது. அது திங்களன்று கனமழை காரணமாக உடைந்தது. இதனால் அணையில் இருந்து வெள்ளம் பாய்ந்து மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன. இந்த அணை உடைப்பில் 45 பேர் பலியாகினார். சுமார் 109 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த அணை உடைப்பிற்கு பிறகு அப்பகுதியில் இருந்து 49 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கென்யாவில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக மழை பெய்ததில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கிஜாபே அணை உடைந்ததை அடுத்து அந்நாட்டில் உள்ள பிறை அணைகளிலும் ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu