பூமியிலிருந்து 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புறக்கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு

பூமிக்கு வெளியே இருக்கும் பல்வேறு புறக்கோள்களில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பூமியிலிருந்து 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புறக்கோள் ஒன்றில் தண்ணீர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம், பல்வேறு புறக்கோள்களில் தண்ணீர் மற்றும் வாழ்வதற்கேற்ற வளிமண்டல சூழல் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டபுள்யூ […]

பூமிக்கு வெளியே இருக்கும் பல்வேறு புறக்கோள்களில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பூமியிலிருந்து 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புறக்கோள் ஒன்றில் தண்ணீர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம், பல்வேறு புறக்கோள்களில் தண்ணீர் மற்றும் வாழ்வதற்கேற்ற வளிமண்டல சூழல் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டபுள்யூ ஏ எஸ் பி 43 பி என்று பெயரிடப்பட்டுள்ள புறக்கோளில் அடர்த்தியான மேகங்கள் மற்றும் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோளின் வளிமண்டலத்தில் மீத்தேன் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த கோளின் ஒரு பாதி நிரந்தரமாக பகலாகவும், மற்றொரு பாதி நிரந்தரமாக இரவாகவும் இருக்கிறது. வியாழன் கோள் அளவுக்கு பெரியதாக உள்ள இந்த கிரகத்தில், பகல் பொழுது இருக்கும் பகுதியில் 1250 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு பொழுது இருக்கும் பகுதியில் 600 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவுகிறது. இதனால், அங்கு வலிமையான காற்று மண்டலம் உருவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu