காருக்குள் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் அதிகமாக உள்ளது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2015 முதல் 2022 வரை தயாரிக்கப்பட்ட 101 கார்கள் ஆய்வு செய்யப்பட்டன. மின்சார கார்கள், எரிவாயு கார்கள், ஹைபிரிட் கார்கள் என அனைத்து வகை கார்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 99% கார்களில் TCIPP என்ற விஷத்தன்மை கொண்ட பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில கார்களில் கூடுதலாக TDCIPP மற்றும் TCEP ஆகிய பொருட்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகும். அதன்படி, காருக்குள் உள்ள மனிதர்கள் புற்றுநோயை சுவாசித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதிக நேரம் காருக்குள் செலவிடும் கார் ஓட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது குழந்தைகளையும் பாதிக்கும் என்பதால் மிகப்பெரிய சமூகப் பிரச்சனை ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.