ஆப்கானிஸ்தானில் கனமழை - 50 பேர் பலி

May 11, 2024

ஆப்கானிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்லான் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலரை காணவில்லை. தற்போது ஆப்கானிஸ்தானின் நஹரின், பர்கா மற்றும் பாக்லான் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர் என்று தலிபான் அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை […]

ஆப்கானிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்லான் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலரை காணவில்லை. தற்போது ஆப்கானிஸ்தானின் நஹரின், பர்கா மற்றும் பாக்லான் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர் என்று தலிபான் அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த வெள்ளத்தின் தீவிரம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu