பாகிஸ்தானில் 125 டிகிரி வெயில்

May 28, 2024

பாகிஸ்தானில் 126 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை கூறியுள்ளது. கடந்த சில நாட்கள் ஆகவே பாகிஸ்தானில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் 126 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சிந்துவில் உள்ள மொகஞ்சதாரோவில் 126 டிகிரி வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை […]

பாகிஸ்தானில் 126 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை கூறியுள்ளது.

கடந்த சில நாட்கள் ஆகவே பாகிஸ்தானில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் 126 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சிந்துவில் உள்ள மொகஞ்சதாரோவில் 126 டிகிரி வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை துறை கூறியுள்ளது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. இந்த வெயிலின் தாக்கத்தால் பலர் உடல் நிலை பாதித்து வருகிறது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் சர்தார் சர்ப்பராஜ் கூறுகையில், பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தென்மேற்கு மாகாணமான பலிச்சிஸ்தானில் உள்ள டர்பட் நகரில் 129.2 டிகிரி வெயில் பதிவானது அதிகபட்சமாகும். இது உலகின் நான்காவது அதிக வெப்ப பதிவாகும் என்றார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu