நார்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் தொடரில் மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட ஆறு பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். இதில் ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். இந்நிலையில் மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டு விளையாடினார். அதன் பின்பு அபாரமாக விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்