இங்கிலாந்து ராணியாக இருந்த எலிசபெத் மறைந்ததை அடுத்து, புதிய மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ளார். அவரது உருவம் பொறித்த நாணயங்கள் மற்றும் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நோட்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் மன்னர் சார்லஸின் உருவம் பொறித்த 10 பவுண்டு, 20 பவுண்ட் மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுகள் வெளியாகி உள்ளது. நேற்று முதல் இங்கிலாந்து வங்கி சார்பில் இந்த நோட்டுகள் புழக்கத்துக்கு வெளியாகி உள்ளன. குறிப்பிட்ட தபால் நிலையங்களில் இருந்து இந்த கரன்சி நோட்டுகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மகராணி எலிசபெத் உருவம் பொறிக்கப்பட்ட நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இன்னும் சில மாதங்கள் கழித்து, மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் என கருதப்படுகிறது.