நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை திமுகவிற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மகுடம் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாமக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. அதன்பின் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின் தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது