வெப்ப அலை காரணமாக இந்தியாவின் வருவாயில் 5.4% இழப்பு நேரிட்டுள்ளது - அறிக்கை

October 21, 2022

வெப்ப அலை காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள ஜி 20 நாடுகளில், இந்தியா முதலிடம் வகிப்பதாக கிளைமேட் ட்ரான்ஸ்பரன்சி ரிப்போர்ட் 2022 என்ற அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிக்கை, பருவநிலை மாற்றம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை கூறியுள்ளது. அத்துடன், பருவநிலை குறித்து, ஜி-20 நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அவை போதிய அளவில் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் படி, ஜி 20 நாடுகள் சர்வதேச ஜிடிபி […]

வெப்ப அலை காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள ஜி 20 நாடுகளில், இந்தியா முதலிடம் வகிப்பதாக கிளைமேட் ட்ரான்ஸ்பரன்சி ரிப்போர்ட் 2022 என்ற அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிக்கை, பருவநிலை மாற்றம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை கூறியுள்ளது. அத்துடன், பருவநிலை குறித்து, ஜி-20 நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அவை போதிய அளவில் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, ஜி 20 நாடுகள் சர்வதேச ஜிடிபி யில் 85 சதவீதத்தை உள்ளடக்கி உள்ளன. மேலும், 75 சதவீத சர்வதேச வணிகம் ஜி-20 நாடுகளின் மூலம் நடக்கிறது. அத்துடன், உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை இந்த நாடுகளில் அடங்கியுள்ளது. அத்துடன், உலகளாவிய கார்பன் உமிழ்வில் நான்கில் மூன்று பகுதி ஜி 20 நாடுகளின் மூலம் நிகழ்கிறது. எனவே, ஜி-20 நாடுகள் எடுக்கும் நடவடிக்கையால் பருவ நிலையில் முக்கிய மாற்றம் நிகழும் என்ற புரிதலை இந்த அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லை என்பதையும் எடுத்துரைத்துள்ளது.

சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த அறிக்கையை தயாரித்து உள்ளனர். இதன் மூலம், வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் கடைநிலை ஊழியர்கள், வீடுகள் அற்றவர்கள் போன்றவர்கள் இந்த வெப்ப அலையால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், கோதுமை விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த வெப்ப அலை சர்வதேச கோதுமை வணிகத்தை பாதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரைன் நாட்டினால் கோதுமை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதனை, இந்தியா ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெப்ப அலையால் இது தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற வணிக பாதிப்புகளால், இந்தியாவுக்கு 5.4% வருவாய் இழப்பு நேரிட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சர்வதேச அளவில், கார்பன் உமிழ்வை பொறுத்தவரை, அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. உலகளாவிய கார்பன் உமிழ்வில் 25 சதவீதத்தை அமெரிக்காவும், 22 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியமும் ஆக்கிரமித்துள்ளன. இந்தியா வெறும் மூன்று சதவீத உலகளாவிய கார்பன் உமிழ்வை மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால், இந்தியாவில் 10 சதவீத மக்கள் தொகை, கோடை காலத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகளாவிய வெப்பநிலையை 1.5 டிகிரி ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உலக நாடுகள் செயல்பட்டு வருகின்றன. எனினும், இந்த இலக்கை எட்டுவதற்கு போதிய அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டில் 2.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், 2100 இல் 2.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் இந்த இலக்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை எச்சரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu