நேட்டோ செயலாளராக மார்க் ருடே தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவின் தலைவராக நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருடே தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். நேட்டோ பொதுச்செயலராக இவருக்கு எதிராக போட்டியில் இருந்தவர் ருமேனிய அதிபர் கிளாஸ். அவர் சமீபத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து நேட்டோவின் தலைமை பொறுப்புக்கு மார்க் ருடே தேர்வாவது உறுதியாகியுள்ளது. இது குறித்து அதிபர் கிளாஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மார்க் ருடே நேட்டோவின் தலைவராக ருமேனியா தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு அளிக்கிறது.
தற்போது நேட்டோ அமைப்பு மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. இந்நிலையில், மார்க் ருடே அதன் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார். உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு நேரடியாக ஈடுபட்டால் மூன்றாம் உலகப் போர்வெடிக்கும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது. மார்க் ருடே உக்ரைனின் தீவிர ஆதரவாளர் ஆவார். அவர் ரஷ்ய அதிபர் புதினை மிகவும் கடுமையாக எதிர்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.