டெல்லியில் கனமழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏராளமான இடங்களில் மழை நீர் சூழ்ந்து உள்ளது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விமான நிலையத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்