ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, முதியோர் ஓய்வூதியத்தை 3000 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் சந்திரபாபு நாயுடு அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி முதியோர் ஓய்வூதியம் 3000 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று மாற்றுத்திறனாளிகள், தீவிர நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் உதவி தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர்கள், இறக்கும் தொழிலாளர்கள், மீனவர்கள் திருநங்கைகள், எச்ஐவி நோயாளிகளுக்கும் மாதம் தோறும் ரூபாய் 4000 உதவி பணம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்க வைத்தார். அதன்படி நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு அந்தந்த கிராம பஞ்சாயத்து, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் உதவி தொகைகளை வழங்கினர்