மத்திய அரசு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனப்படும் டான்ஜெட்கோவை இரண்டாகப் பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
டான்ஜெட்கோ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் நிலக்கரி, டீசல் அல்லது வேறு ஏதேனும் ஒத்த எரிபொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் காற்று, சூரிய ஒளி, உயிரி எரிபொருள், கடல் அலைகள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் டான்ஜெட்கோ பிரிக்கபடுவதால் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் எவ்வித இடர்பாடுகளும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது














