நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பில் உள்ள 22 ஏக்கர் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து விட்டதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக […]

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பில் உள்ள 22 ஏக்கர் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து விட்டதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதர சேகர் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆகி இருந்தது. இதற்கிடையே, சிபிசிஐடி போலீசார் ஐந்து தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேடி வந்தனர். இந்த தகவல் அறிந்ததும் விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவர் வெளிமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அவரது முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்த விஜயபாஸ்கரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீசார் கரூருக்கு அழைத்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu