ஓமன் அருகே கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகி உள்ளனர். இந்த விபத்து குறித்து அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். கப்பலில் இருந்து மாயமாகிய 16 பேரையும் தேடும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம் மாயமான இந்தியர்களை மீட்க ஓமன் சென்றுள்ளது. இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் மற்றும் கடல் சார் கண்காணிப்பு விமானம் பி -8 ஆகியவை மீட்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. தற்போது கடலில் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வந்துள்ளது.