நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்பிஎஸ் வாத்சல்யா என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
என் பி எஸ் வாத்சல்யா திட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிதி சேமிப்பு செய்ய முடியும். குழந்தைகள் 18 வயது வரும் வரையில் அவர்களின் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க முடியும். இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள என் பி எஸ் திட்டங்களைப் போலவே கணக்கிடப்பட்டு வரும். குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு, அவர்களின் பெயருக்கு நிலையான என்.பி.எஸ் கணக்கு தொடங்கப்பட்டு, தொகை மாற்றம் செய்யப்படும். இது குழந்தைகளுக்கான நீண்ட கால நிதி பாதுகாப்பாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.