ரஷியாவில் 1000 சதுர கிலோமீட்டரை உக்ரைன் கைப்பற்றியது

August 14, 2024

உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார். ரஷ்யாவின் கூர்க்ஸ் மாகாணத்தில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அங்கிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார். சுமார் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளது என்று […]

உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கூர்க்ஸ் மாகாணத்தில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அங்கிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார். சுமார் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளது என்று அவர் கூறினார். உக்ரைன் படைகளை விரட்டும் பணியில் ரஷ்யப் படைகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூர்க்ஸ் பகுதியில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரஷ்ய மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தகவல் அளித்தது.

இது குறித்து புதின் கூறுகையில், அப்பாவி ரஷ்ய பொதுமக்கள் மீதும், அணுமின் நிலையங்கள் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்துவது சரியல்ல. போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் ரஷ்யாவை விட தன்னிலை ஓங்கி இருக்க இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. உக்ரைன் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யப்படை மீட்டு முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை நிர்பந்திக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று உக்ரைன் வெளியுறவுத் துறை மந்திரி உறுதிப்படுத்தி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu