பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

August 21, 2024

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இவை 5.1 என்ற ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின்போது அங்கு இருந்த பல கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறு அடுத்தடுத்து நில நடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 20 கிலோமீட்டர்கள் இருந்தது. இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும், […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இவை 5.1 என்ற ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின்போது அங்கு இருந்த பல கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறு அடுத்தடுத்து நில நடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 20 கிலோமீட்டர்கள் இருந்தது. இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு பஞ்சாப் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளிலும் நடுக்கம் உணரப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu