டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல அனுமன் சிலை திறக்கப்பட்டது
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், 90 அடி உயரமுள்ள புதிய வெண்கல அனுமன் சிலை திறக்கப்பட்டது. 'ஒன்றிணைப்பு சிலை' என்று அழைக்கப்படும் இந்த சிலை, இந்தியாவின் எல்லை மீறி நிறுவப்பட்ட மிக உயரமான அனுமன் சிலை ஆகும் மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலையாகும். நியூயார்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் புளோரிடாவின் பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் இரண்டு உயரமான சிலைகளாக உள்ளன. டெக்ஸாஸ் ஹூஸ்டனில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோவிலில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. 'பிராண பிரதிஷ்டை' விழாவின்போது, ஹெலிகாப்ட்டர் மூலம் மலா் தூவல், புனித நீர் தெளிப்பு மற்றும் 72 அடி நீள மாலை அணிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமன் நாமங்களை கோஷம் செய்தனர்.