பிரபல சமூக ஊடக தளமான டெலகிராம் தளத்தின் தோற்றுநர் பாவல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தகவல் பரிமாற்றத்துக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கு அவர் தவறியதாகவும், இதனால் சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் இணைய வழி குற்றங்களும் பெருகி உள்ளன. இதற்கு டெலிகிராம் செயலி மூலம் தகவல் பரிமாற்றம் நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தவறான வழியில் செயலியை பயன்படுத்துவதை தடுக்க தவறிய குற்றத்திற்காக பாவல் துரோவ் பாரிசில் கைது செய்யப்பட்டுள்ளார்.