உக்ரைனில் ரஷியாவின் தொடர் தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷிய படைகள் இன்று காலை ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி திடீரென தாக்குதல் நடத்தின. இது பல வாரங்களாக இல்லாத மிக கடுமையான தாக்குதலாக கருதப்படுகிறது. உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு, மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்து பல பாலிஸ்டிக் மற்றும் நவீன ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. கீவ் நகரில் குண்டுவெடிப்பு காரணமாக மின்விநியோக தடை செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. சுமார் 100 ராக்கெட்டுகள் மற்றும் 100 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்கீவ், கீவ், ஒடிசா ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.