மத்திய கிழக்கு பகுதியில் மோதல் தொடர்ந்து வரும் நிலையிலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இந்திய சந்தைகளில் உயர்ந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 585 புள்ளிகள் உயர்ந்து, 6 நாள் இழப்பை ஈடு செய்துள்ளது. நிஃப்டி மீண்டும் 25,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. மேலும், மும்பை பங்குச்சந்தை 81634.81 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை 25013.15 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அதானி பவர், ரிலையன்ஸ், இன்போசிஸ், பேடிஎம், சுசிலான் எனர்ஜி, எஸ் வங்கி, ஜொமாட்டோ, எச்டிஎப்சி வங்கி, மகேந்திரா போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஐடிசி, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ் போன்றவை சரிவடைந்துள்ளன.