இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்படும் ஐ.நா. அமைதிப் படைகளுக்கு இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆதரவைத் தெரிவிக்க, லெபனானுக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மெலோனி, லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையை எந்த முறையிலும் நியாயமாக்க முடியாது என்றும், ஐ.நா. அமைதிப் படைகளின் மீதான தாக்குதல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு முரணானது என்றும் குற்றம்சாட்டினார்.