மனநல மருத்துவர் மற்றும் மூளை ஆராய்ச்சியாளர் டாக்டர் டேனியல் ஆமென், குடல் ஆரோக்கியமும் மூளை ஆரோக்கியமும் நெருங்கிய தொடர்புடையவை என்று கூறியுள்ளார். குறிப்பாக மனச்சோர்வு பிரச்சனை உள்ளவர்கள் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டாக்டர் ஆமென் கூறுகையில், நம் உடலில் 100 டிரில்லியனுக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் நம் மூளையின் செயல்பாடு மற்றும் மனநிலையை பாதிக்கின்றன. அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது இந்த நுண்ணுயிரிகளின் சமநிலையை குலைத்து மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூளையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.