காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் நடந்த இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில், இஸ்ரேல் விமானங்கள் நள்ளிரவில் குண்டுமழை பொழிந்ததன். இதன் விளைவாக பல வீடுகள், அடுக்குமாடி கட்டிடம், தரைமட்டமாக்கப்பட்டன. பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் 87 பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளது. 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 40-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இடிபாடுகளின் கீழ் பலர் சிக்கியிருக்கலாம். மேலும் அவசர உதவிக்கு செல்லும் வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் தோர் வென்னஸ்லேன்ட் கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதலால் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மனிதாபிமான உதவிகள் தர இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.