இந்தியா, பிரேசிலிலிருந்து உளுந்து மற்றும் துவரம் பருப்பு இறக்குமதியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.
பிரேசில் வேளாண்துறை பிரதிநிதிகள், இந்தியா வந்து நுகர்வோர் துறையின் அதிகாரிகளுடன் தில்லியில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த சில ஆண்டுகளில், இந்தியா பிரேசிலிலிருந்து பருப்பு இறக்குமதியை ஏற்கனவே அதிகரித்துள்ளது. 2023-ல் 4102 டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது. 2024 அக்டோபர் வரை இறக்குமதி 22,000 டன்னாக வளர்ந்துள்ளது.
இந்தியாவில் பருப்பு உற்பத்தி உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. பருவம் மற்றும் நிலவியல் காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்படுவதாலும், உற்பத்தி குறைவதாலும், இறக்குமதி செய்வது அவசியமாக இருக்கிறது.