இந்தியாவில் கடல் விமான சுற்றுலா சேவையின் தொடக்கம்

November 12, 2024

ஆந்திரா மற்றும் கேரளாவில் கடல் விமான சுற்றுலா சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சியாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சுற்றுலா சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சேவை, தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சோதனை ஓட்டமாக தொடங்கியது. ஆந்திராவை தொடர்ந்து, கேரளாவில் இந்த சேவை கொச்சி மற்றும் மூணாறு இடையே தொடங்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 5 பேருடன் பயணம் […]

ஆந்திரா மற்றும் கேரளாவில் கடல் விமான சுற்றுலா சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சியாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சுற்றுலா சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சேவை, தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சோதனை ஓட்டமாக தொடங்கியது. ஆந்திராவை தொடர்ந்து, கேரளாவில் இந்த சேவை கொச்சி மற்றும் மூணாறு இடையே தொடங்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 5 பேருடன் பயணம் செய்யக்கூடிய கடல் விமானம் கொச்சியில் தரையிறக்கப்பட்டு, இன்று மாட்டுப்பெட்டி நீர்த்தேக்கத்தில் தரையிறக்குதல் தொடங்குகிறது.கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி 2011 ஆம் ஆண்டில் கொல்லம்-ஆலப்புழா இடையே கடல் விமான சேவையை தொடங்கும் முயற்சியில் இருந்தார், ஆனால் மீனவர்களின் எதிர்ப்பால் அது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கேரளா மாநில அரசு முன்வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu