தமிழக அரசு ஊட்டச்சத்து குறைபாடு தீர்க்க புதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தை 2022ஆம் ஆண்டு தொடங்கியதாக கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 77.3% குழந்தைகளின் உடல் நிலை மேம்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 76,705 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இத்திட்டதிற்காக 22 கோடி ரூபாயை நிர்ணயித்து இந்த திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், வரும் நாளில் அரியலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கவுள்ளார்.