பாகிஸ்தானின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பல்வேறு தாக்குதல்களில் 76 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் தொடங்கி பல்வேறு தாக்குதல்களில் 76 பேர் பலியாகி உள்ளனர். சமீபத்தில், மண்டோரி சார்கெல் பகுதியில் வாகனத்தில் பயணித்த 40 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, பகன் கிராமத்தில் தீவைத்தல் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற தாக்குதல்களில் 21 பேர் பலியாகினர். பின்னர், சமரச ஒப்பந்தம் பிரகடனமானது. அதற்குப் பிறகு, கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் பகுதிகளில் மோதல்கள் மீண்டும் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.