பஹ்ரைனில் கைதான 28 தமிழக மீனவா்கள் டிசம்பா் 10-இல் விடுவிக்கப்படுவார்கள்.
பஹ்ரைன் கடல் பகுதியில் எல்லை தாண்டிச் சென்கொண்ட 28 தமிழக மீனவா்களை, பஹ்ரைன் அரசு கைது செய்தது. இந்த மீனவா்களை டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான சி. ராபா்ட் ப்ரூஸுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். இதில், 28 இந்திய மீனவா்கள் பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்டதைப் பற்றிய உங்கள் கடிதத்தை செப்டம்பர் 20-ம் தேதி பெற்றேன். அவா்கள் டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் பாஜக தலைவராகிய அண்ணாமலையிடமும் அனுப்பப்பட்டது.