நாகையில் இருந்து இலங்கைக்கான புதிய கப்பல் சேவை 2025-ல் தொடக்கம்.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பன்னாட்டு பயணிகள் கப்பல் சேவையின் மூலம் பயணிகள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த சேவையை மேலும் விரிவாக்குவதற்காக 2025 ஆம் ஆண்டில் புதிய கப்பலை இயக்குவதற்கு சுபம் கப்பல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய கப்பல் 250 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இயக்கப்படும். கடல்சார் துறையில் வேலைவாய்ப்புகள் மற்றும் பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட கோரிக்கைகள் குறித்து நாட்டிலஸ் ஷிப்பிங் கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் கடலோடிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.