புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 34-27 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி.
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. தொடர்ந்து, இந்த தொடர் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசம், நொய்டாவில் நடைபெற்றது, மற்றும் தற்போது மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடக்கின்றன.முதலாவது போட்டியில், தமிழ் தலைவாஸ் அணியும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. இதில், 34-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், உ.பி. யோதாஸ் 30-27 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது.