அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நேற்று துப்பாக்கி சூடு நடந்தது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது, துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன் உயிரிழந்துவிட்டான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பள்ளி சமூகத்தில் அதிர்ச்சி உண்டாக்கியுள்ளது.














