மொசாம்பிக்கில் சிடோ சூறாவளி தாக்கியதில் 34 பேர் பலியாகினர்.
மொசாம்பிக்கில், சிடோ சூறாவளி பல பகுதிகளை தாக்கியுள்ளது. அதில் நியாஸ்சா மற்றும் கபோ டெல்கடோ ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் காற்று வீசியது. இதுவரை 34 பேர் பலியாகினர். 319 பேர் காயமடைந்துள்ளனர். 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை தலைவர் லூயிசா மெக் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கபோ டெல்கடோ மாகாணத்தின் மெகுபி மாவட்டத்தில் சூறாவளி கரையை கடந்தது. வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்தன, மின் கம்பங்களும் சரிந்தன. 23,600 வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிம்பாப்வேக்கு அருகில் இந்த சூறாவளி வலுவிழக்கும் என்று கூறப்படுகிறது.