BEML நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத இரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினால், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3,657.53 கோடியாகும். இந்த ஒப்பந்தத்தில், 3 மற்றும் 5வது வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படவுள்ள 70 மெட்ரோ இரயில்களுக்கு தேவையான 3 பெட்டி கொண்ட மெட்ரோ இரயில்களை BEML நிறுவனம் தயாரிக்கும். ஒப்பந்தத்தின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டில் முதல் மெட்ரோ இரயில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படும். பின்னர், சோதனைகள் மற்றும் பராமரிப்புக்கான பணிகள் இடம்பெற்று, அனைத்து இரயில்களும் 2029-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும்.