2025ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.20 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும். இந்த பரிசுத்தொகுப்பு, 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு ரூ.249.76 கோடி செலவு செய்யும் எனவும், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் ஜனவரி 9ம் தேதி முதல் துவங்குவதாகவும், முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் கடைகளில், போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.