அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உதவியில் நம்பகதன்மை வாய்ந்த நாடாக இல்லை என கூறியுள்ளார். உக்ரைனின் நலனில், இந்தியா கவனத்தில் கொண்டு உள்ளது. இதனால், ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா குறைத்து கொண்டுள்ளது.
ரஷ்ய பயணத்தில், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறிய தகவல்கள், ஐ.நா.வில் பிரதமர் மோடி கூறிய விஷயங்களுடன் ஒத்து போகின்றன. இது போருக்கான சகாப்தம் அல்ல என பிரதமர் மோடி தெளிவுப்படுத்தி இருக்கிறார். தூதுரக முறையில், பேச்சுவார்த்தை வழியே போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா விரும்புகிறது. இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு உறவுகள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் நல்லுறவை பேணவும், ஆழப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம் என மேலும் அவர் கூறியுள்ளார்.