University of Southern California (USC)-ன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமியின் மையக்கரு பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏற்கனவே பூமியின் மையக்கரு நெகிழ்வாக இருக்கலாம் என்ற முன் யூகங்களை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது.
விஞ்ஞானிகள் பூமியின் மையக்கரு சுற்றுவரியின் வேகம் குறைவதை கண்டறிய முயன்ற போது, எதிர்பாராத வகையில் பூமியின் மையக்கரு உறுதியாக இல்லை என்ற புதிய ஆதாரங்களை கண்டுபிடித்தனர். விஞ்ஞானி Vidale கூறுகையில், "பல்வேறு நிலநடுக்க தரவுகளை பகுப்பாய்வு செய்த போது, சில seismic wave தரவுகளில் வழக்கத்திற்கு மாறான தன்மைகள் இருந்ததை கண்டேன். இதன் மூலம், பூமியின் மையக்கரு உறுதியாக இல்லை என்ற உண்மையை உணர்ந்தேன்," என்றார். மேலும், இதன் காரணமாக பூமியின் மையக்கருவில் இயக்கம் நடைபெறக்கூடும் என்றும் தெரிவித்தார். இது, பூமியின் மாறும் வெப்பநிலை மற்றும் காந்தப்புலத்தை பற்றிய புரிதலை மேம்படுத்தும் என்றும், ஒரு நாளின் நீளத்தை சிறிய அளவிற்கு மாற்றக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த முக்கியமான ஆய்வு Nature Geoscience பத்திரிகையில் பிப்ரவரி 10, 2025 அன்று வெளியிடப்பட்டது.