அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே (54) எக்ஸ் தளத்தில் லிப்ரா கிரிப்டோகரன்சி குறித்து பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க இது உதவும் என்று அவர் கூறினார். மேலும் அந்த நாணயத்தை வாங்குவதற்கான இணைப்பையும் பகிர்ந்ததால், அதன் மதிப்பு உயர்ந்தது. இதனால் கிரிப்டோவை விளம்பரப்படுத்துவதாகக் கூறி அதிபருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சில மணி நேரங்களில் அவர் தனது பதிவை நீக்கினார்.
இதன் காரணமாக பல முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததாக புகார் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததோடு, பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தீர்மானித்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் அதிபர் மீது மோசடி புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து நீதிபதி ஒருவர் விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தன்னை விடுவிக்குமாறு அதிபர் மிலே கோரிக்கை விடுத்ததோடு, தான் நல்லெண்ணத்துடன் செயல்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.