ஜம்மு-காஷ்மீர் அரசு மலையேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக முழுமையாக தடை செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மோசமாகியுள்ள நிலையில், உதம்பூர், பூஞ்ச், ரஜௌரி பகுதிகளில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் அரசு மலையேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக முழுமையாக தடை செய்துள்ளது.