மோசமான வானிலை காரணமாக ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம் ஜூன் 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்தும் ஆக்சியம்-4 மனித விண்வெளிப் பயணம், புளோரிடாவில் உள்ள கென்னடி மையத்தில் இருந்து புறப்படவிருந்தது. வானிலை காரணமாக இது நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் சுபான்ஷூ சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு, ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராக சுபான்ஷூ சுக்லா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக உள்ளது.