தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அட்டையை விரைவாக வழங்க புதிய முறைமையை அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் வாக்காளர் பதிவு செய்த 15 நாட்களுக்குள் அட்டையை பெற்றிடும் வசதி வழங்கப்படுகிறது.
இதுவரை வாக்காளர் அட்டை கிடைப்பதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டது. இதனை மாற்ற, தற்போது தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இனிமேல், புதிதாக பதிவு செய்தவர்களுக்கும், விவரங்களை திருத்தியவர்களுக்கும் 15 நாட்களுக்குள் வாக்காளர் அட்டை தபால் மூலம் வழங்கப்படும். இதற்காக புதிய தகவல் தொழில்நுட்ப செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்டதிலிருந்து தபால் மூலம் அனுப்பப்படும் வரை ஒவ்வொரு கட்டத்தையும் குறுஞ்செய்தி மூலம் வாக்காளர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறை, சேவையை விரைவாகவும் பன்மடங்காக வசதியாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.